< Exodus 9 >

1 LEUM GOD El fahk nu sel Moses, “Utyak nu ye mutal tokosra ac fahk nu sel lah LEUM GOD lun mwet Hebrew El fahk, ‘Lela mwet luk in som, tuh elos in ku in alu nu sik.
பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு.
2 Kom fin sifilpa srunga fuhlela elos in som,
நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால்,
3 nga ac kai kom, ac supwaot sie mas na upa nu fin kosro nukewa — horse nutum, donkey nutum, camel, cow, sheep ac nani.
யெகோவாவுடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும்.
4 Nga fah sraclik kosro nutin mwet Israel liki kosro nutin mwet Egypt, na ac fah wangin kosro nutin mwet Israel misa.
யெகோவா இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை” என்றார்.
5 Nga, LEUM GOD, oakiya tuh lutu nga fah oru ma inge.’”
மேலும், நாளைக்குக் யெகோவா இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, யெகோவா ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார்.
6 Len se toko, LEUM GOD El oru oana El fahk, ac kosro nukewa nutin mwet Egypt ah misa, a tia soko kosro nutin mwet Israel misa.
மறுநாளில் யெகோவா அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை.
7 Tokosra el sapla siyuk lah mea sikyak, na fwackyang nu sel lah wangin sokofanna kosro nutin mwet Israel misa. Tusruktu upa na nankal ac el tia lela mwet ah in som.
பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை.
8 Na LEUM GOD El fahk nu sel Moses ac Aaron, “Eis kutu apat an inpoumtal liki funyu uh, na Moses elan sisak nu lucng ye mutal tokosra.
அப்பொழுது யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும்.
9 Ac fah sokelik oana fofosr lun fohkfok fin acn nukewa lun Egypt, ac yen nukewa ac sikyak faf su ac orala ruf aryur fin mwet ac fin kosro.”
அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும்” என்றார்.
10 Ouinge eltal eis kutu apat ac tu ye mutal tokosra. Moses el sisak nu lucng, ac apat uh ekla faf su orala ruf aryur ke monin mwet ac kosro uh.
௧0அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது.
11 Mwet orek inutnut uh koflana tuku nu ye mutal Moses, mweyen manolos wi afla ke faf, oana mwet Egypt nukewa ngia.
௧௧அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது.
12 Na LEUM GOD El akupaye nankal tokosra, tuh elan tia lungse lohngol Moses ac Aaron, oana ke LEUM GOD El tuh fahk nu sel Moses meet ah.
௧௨ஆனாலும், யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தபடியே, யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்கவில்லை.
13 Na LEUM GOD El fahk nu sel Moses, “Toangna lutu, kom in som tu ye mutal tokosra ac fahkang nu sel lah LEUM GOD lun mwet Hebrew El fahk, ‘Fuhlela mwet luk in som, tuh elos in ku in alu nu sik.
௧௩அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ அதிகாலையில் எழுந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு.
14 Pacl se inge nga ac supwaot mwe ongoiya upa nukewa luk nu fom ac nu fin mwet fulat lom ac mwet lom, tuh kom fah etu lah wangin sie oana nga fin faclu nufon.
௧௪விடாமல் இருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படி, இந்தமுறை நான் எல்லாவித வாதைகளையும் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், உன்னுடைய மக்கள்மேலும் அனுப்புவேன்.
15 Nga funu srukak pouk in lain kom ac mwet lom ke mas, kowos lukun wanginla na pwaye.
௧௫நீ பூமியில் இல்லாமல் நாசமாகப்போகும்படி நான் என்னுடைய கையை நீட்டி, உன்னையும் உன்னுடைய மக்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.
16 Tusruktu sripa se sis nga lela kom in moulna, tuh in fahkak ku luk nu sum, ac inek in pwengelik nu fin faclu nufon.
௧௬என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன்.
17 Ne ouinge, kom srakna inse fulat ac tia lungse lela mwet luk uh in som.
௧௭நீ என்னுடைய மக்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாக உன்னை உயர்த்துகிறாயா?
18 Ke pacl se na inge lutu, nga fah oru sie af na matol ac af yohk kosra, su tia liyeyuk oemeet me in acn Egypt.
௧௮எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன்.
19 Inge sapkin tuh kosro nutum ac ma nukewa saya ma muta in imah uh in utukyak nu in lohm uh. Af yohk kosra ac fah kahki nu fin mwet ac kosro ma mutana in imae ac tia utukyak nu in lohm ah, ac elos nukewa fah misa.’”
௧௯இப்பொழுதே ஆள் அனுப்பி, உன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும்படி அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்” என்றார்.
20 Kutu sin mwet fulat lal tokosra elos sangeng ke ma LEUM GOD El fahk inge, oru elos usak mwet kohs lalos ac kosro natulos nu in lohm ah.
௨0பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் யெகோவாவுடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான்.
21 A kutu mwet uh tia lohang nu ke ma LEUM GOD fahk, ac fuhlelana mwet kohs lalos ac kosro natulos in mutana in imae.
௨௧எவன் யெகோவாவுடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
22 Na LEUM GOD El fahk nu sel Moses, “Sralak poum nu lucng, ac af yohk kosra fah kahki nu fin mutunfacl Egypt nufon — nu fin mwet, kosro, ac mwe yok in imae nukewa.”
௨௨அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசம் எங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற எல்லாவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார்.
23 Ouinge Moses el srukak sikal lal ac kolak nu lucng, ac LEUM GOD El supweya pulahl ac af yohk kosra, ac sarom kasri nu in fohk uh. LEUM GOD El supweya
௨௩அப்படியே மோசே தன்னுடைய கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது யெகோவா இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாக ஓடியது; எகிப்து தேசத்தின்மேல் யெகோவா கல்மழையைப் பெய்யச்செய்தார்;
24 af na matol ac yohk kosra, ac oasr sarom yen nukewa. Paka se inge upa liki kutena paka ma sikyak meet in acn Egypt.
௨௪கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.
25 Fin acn Egypt nufon, af upa se inge kunausla ma nukewa ma oan likinum ac in imae, weang mwet ac kosro — kunausla mahsrik nukewa ac koteya sak nukewa.
௨௫எகிப்து தேசம் எங்கும் மனிதர்களையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.
26 Acn Goshen mukena, yen mwet Israel muta we, pa wangin af upa we.
௨௬இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது.
27 Tokosra el sapla solalma Moses ac Aaron, ac fahk nu seltal, “Nga sifacna fahkyuyak inge lah oasr ma koluk luk. LEUM GOD pa suwohs, ac nga ac mwet luk uh pa tafongla.
௨௭அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நான் இந்தமுறை பாவம் செய்தேன்; யெகோவா நீதியுள்ளவர்; நானும் என்னுடைய மக்களும் துன்மார்க்கர்கள்.
28 Pre nu sin LEUM GOD, mweyen pulahl ac af yohk kosra inge arulana upala nu sesr! Nga wuleot in filikowosla in som. Kowos tia enenu in sifilpa muta yenu.”
௨௮இது போதும்; இந்தப் பெரிய இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை” என்றான்.
29 Moses el fahk nu sel, “Pacl se na nga illa liki siti uh, nga fah sralak pouk in pre nu sin LEUM GOD. Pulahl ac fah tui, ac ac fah wanginla af upa, tuh kom fah ku in etu lah faclu ma lun LEUM GOD.
௨௯மோசே அவனை நோக்கி: “நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி யெகோவாவுடையது என்பதை நீர் அறிவீர்.
30 Tusruktu nga etu lah kom ac mwet fulat lom srakna tia sangeng sin LEUM GOD.”
௩0இருந்தாலும் நீரும் உம்முடைய வேலைக்காரர்களும் இன்னும் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன்” என்றான்.
31 Flax ac barley kunausyukla ke af upa sac, mweyen barley ah mwesrla ac flax ah tufacna fokla.
௩௧அப்பொழுது வாற்கோதுமை கதிர்விட்டும் கொள்ளுப்பயிரானது பூ பூத்திருந்தது; அதினால் கொள்ளும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போனது.
32 Tusruktu wangin wheat musalla, mweyen soenna kapak.
௩௨கோதுமையும் கம்பும் கதிர்விடாமல் இருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.
33 Moses el som lukel tokosra, illa liki siti uh, ac sralak paol nu lucng ac pre nu sin LEUM GOD. Na pulahl wi af yohk kosra ah tui, ac tiana sifilpa af.
௩௩மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமல் இருந்தது.
34 Ke tokosra el liye ma sikyak uh, el sifilpa orekma koluk. El ac mwet fulat lal ah sifilpa akupaye nankalos.
௩௪மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் கண்டபோது, அவனும் அவனுடைய வேலைக்காரர்களும் பின்னும் பாவம்செய்து, தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
35 Na in oana ke LEUM GOD El tuh fahk nu sel Moses meet mu tokosra el ac mau tia lela mwet Israel in som, ouinge el tiana lela.
௩௫யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடவில்லை.

< Exodus 9 >