< ଲୂକଃ 9 >

1 ତତଃ ପରଂ ସ ଦ୍ୱାଦଶଶିଷ୍ୟାନାହୂଯ ଭୂତାନ୍ ତ୍ୟାଜଯିତୁଂ ରୋଗାନ୍ ପ୍ରତିକର୍ତ୍ତୁଞ୍ଚ ତେଭ୍ୟଃ ଶକ୍ତିମାଧିପତ୍ୟଞ୍ଚ ଦଦୌ|
இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒன்றாய்க் கூப்பிட்டு, பிசாசுகளையெல்லாம் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார்.
2 ଅପରଞ୍ଚ ଈଶ୍ୱରୀଯରାଜ୍ୟସ୍ୟ ସୁସଂୱାଦଂ ପ୍ରକାଶଯିତୁମ୍ ରୋଗିଣାମାରୋଗ୍ୟଂ କର୍ତ୍ତୁଞ୍ଚ ପ୍ରେରଣକାଲେ ତାନ୍ ଜଗାଦ|
அத்துடன், இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களை குணமாக்கவும், அவர் அவர்களை அனுப்பினார்.
3 ଯାତ୍ରାର୍ଥଂ ଯଷ୍ଟି ର୍ୱସ୍ତ୍ରପୁଟକଂ ଭକ୍ଷ୍ୟଂ ମୁଦ୍ରା ଦ୍ୱିତୀଯୱସ୍ତ୍ରମ୍, ଏଷାଂ କିମପି ମା ଗୃହ୍ଲୀତ|
இயேசு அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஊன்றுகோலையோ, பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ, கொண்டுபோக வேண்டாம்.
4 ଯୂଯଞ୍ଚ ଯନ୍ନିୱେଶନଂ ପ୍ରୱିଶଥ ନଗରତ୍ୟାଗପର୍ୟ୍ୟନତଂ ତନ୍ନିୱେଶନେ ତିଷ୍ଠତ|
நீங்கள் எந்த வீட்டிற்குள் போகிறீர்களோ, அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை, அங்கேயே தங்கியிருங்கள்.
5 ତତ୍ର ଯଦି କସ୍ୟଚିତ୍ ପୁରସ୍ୟ ଲୋକା ଯୁଷ୍ମାକମାତିଥ୍ୟଂ ନ କୁର୍ୱ୍ୱନ୍ତି ତର୍ହି ତସ୍ମାନ୍ନଗରାଦ୍ ଗମନକାଲେ ତେଷାଂ ୱିରୁଦ୍ଧଂ ସାକ୍ଷ୍ୟାର୍ଥଂ ଯୁଷ୍ମାକଂ ପଦଧୂଲୀଃ ସମ୍ପାତଯତ|
அங்கேயுள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிப் போடுங்கள்” என்றார்.
6 ଅଥ ତେ ପ୍ରସ୍ଥାଯ ସର୍ୱ୍ୱତ୍ର ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯିତୁଂ ପୀଡିତାନ୍ ସ୍ୱସ୍ଥାନ୍ କର୍ତ୍ତୁଞ୍ଚ ଗ୍ରାମେଷୁ ଭ୍ରମିତୁଂ ପ୍ରାରେଭିରେ|
அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமங்கள்தோறும், எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து, மக்களைச் சுகப்படுத்தினார்கள்.
7 ଏତର୍ହି ହେରୋଦ୍ ରାଜା ଯୀଶୋଃ ସର୍ୱ୍ୱକର୍ମ୍ମଣାଂ ୱାର୍ତ୍ତାଂ ଶ୍ରୁତ୍ୱା ଭୃଶମୁଦ୍ୱିୱିଜେ
சிற்றரசன் ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவான் இறந்தோரிலிருந்து உயிரோடு திரும்பவும் எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான்.
8 ଯତଃ କେଚିଦୂଚୁର୍ୟୋହନ୍ ଶ୍ମଶାନାଦୁଦତିଷ୍ଠତ୍| କେଚିଦୂଚୁଃ, ଏଲିଯୋ ଦର୍ଶନଂ ଦତ୍ତୱାନ୍; ଏୱମନ୍ୟଲୋକା ଊଚୁଃ ପୂର୍ୱ୍ୱୀଯଃ କଶ୍ଚିଦ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ସମୁତ୍ଥିତଃ|
வேறுசிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள்.
9 କିନ୍ତୁ ହେରୋଦୁୱାଚ ଯୋହନଃ ଶିରୋଽହମଛିନଦମ୍ ଇଦାନୀଂ ଯସ୍ୟେଦୃକ୍କର୍ମ୍ମଣାଂ ୱାର୍ତ୍ତାଂ ପ୍ରାପ୍ନୋମି ସ କଃ? ଅଥ ସ ତଂ ଦ୍ରଷ୍ଟୁମ୍ ଐଚ୍ଛତ୍|
ஆனால் ஏரோது, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேனே. இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, அவரைப் பார்க்க முயற்சி செய்தான்.
10 ଅନନ୍ତରଂ ପ୍ରେରିତାଃ ପ୍ରତ୍ୟାଗତ୍ୟ ଯାନି ଯାନି କର୍ମ୍ମାଣି ଚକ୍ରୁସ୍ତାନି ଯୀଶୱେ କଥଯାମାସୁଃ ତତଃ ସ ତାନ୍ ବୈତ୍ସୈଦାନାମକନଗରସ୍ୟ ୱିଜନଂ ସ୍ଥାନଂ ନୀତ୍ୱା ଗୁପ୍ତଂ ଜଗାମ|
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார்.
11 ପଶ୍ଚାଲ୍ ଲୋକାସ୍ତଦ୍ ୱିଦିତ୍ୱା ତସ୍ୟ ପଶ୍ଚାଦ୍ ଯଯୁଃ; ତତଃ ସ ତାନ୍ ନଯନ୍ ଈଶ୍ୱରୀଯରାଜ୍ୟସ୍ୟ ପ୍ରସଙ୍ଗମୁକ୍ତୱାନ୍, ଯେଷାଂ ଚିକିତ୍ସଯା ପ୍ରଯୋଜନମ୍ ଆସୀତ୍ ତାନ୍ ସ୍ୱସ୍ଥାନ୍ ଚକାର ଚ|
ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, குணமடைய வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
12 ଅପରଞ୍ଚ ଦିୱାୱସନ୍ନେ ସତି ଦ୍ୱାଦଶଶିଷ୍ୟା ଯୀଶୋରନ୍ତିକମ୍ ଏତ୍ୟ କଥଯାମାସୁଃ, ୱଯମତ୍ର ପ୍ରାନ୍ତରସ୍ଥାନେ ତିଷ୍ଠାମଃ, ତତୋ ନଗରାଣି ଗ୍ରାମାଣି ଗତ୍ୱା ୱାସସ୍ଥାନାନି ପ୍ରାପ୍ୟ ଭକ୍ଷ୍ୟଦ୍ରୱ୍ୟାଣି କ୍ରେତୁଂ ଜନନିୱହଂ ଭୱାନ୍ ୱିସୃଜତୁ|
மாலை வேளையானபோது பன்னிரண்டு பேர்களும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், சாப்பாட்டையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். நாம் சற்று தூரமான ஒரு இடத்தில் இருக்கிறோமே” என்றார்கள்.
13 ତଦା ସ ଉୱାଚ, ଯୂଯମେୱ ତାନ୍ ଭେଜଯଧ୍ୱଂ; ତତସ୍ତେ ପ୍ରୋଚୁରସ୍ମାକଂ ନିକଟେ କେୱଲଂ ପଞ୍ଚ ପୂପା ଦ୍ୱୌ ମତ୍ସ୍ୟୌ ଚ ୱିଦ୍ୟନ୍ତେ, ଅତଏୱ ସ୍ଥାନାନ୍ତରମ୍ ଇତ୍ୱା ନିମିତ୍ତମେତେଷାଂ ଭକ୍ଷ୍ୟଦ୍ରୱ୍ୟେଷୁ ନ କ୍ରୀତେଷୁ ନ ଭୱତି|
அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். அவர்கள் அதற்கு, “எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இல்லையென்றால், நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கவேண்டும்” என்றார்கள்.
14 ତତ୍ର ପ୍ରାଯେଣ ପଞ୍ଚସହସ୍ରାଣି ପୁରୁଷା ଆସନ୍|
அங்கே ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். ஆனால் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார்.
15 ତଦା ସ ଶିଷ୍ୟାନ୍ ଜଗାଦ ପଞ୍ଚାଶତ୍ ପଞ୍ଚାଶଜ୍ଜନୈଃ ପଂକ୍ତୀକୃତ୍ୟ ତାନୁପୱେଶଯତ, ତସ୍ମାତ୍ ତେ ତଦନୁସାରେଣ ସର୍ୱ୍ୱଲୋକାନୁପୱେଶଯାପାସୁଃ|
சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.
16 ତତଃ ସ ତାନ୍ ପଞ୍ଚ ପୂପାନ୍ ମୀନଦ୍ୱଯଞ୍ଚ ଗୃହୀତ୍ୱା ସ୍ୱର୍ଗଂ ୱିଲୋକ୍ୟେଶ୍ୱରଗୁଣାନ୍ କୀର୍ତ୍ତଯାଞ୍ଚକ୍ରେ ଭଙ୍କ୍ତା ଚ ଲୋକେଭ୍ୟଃ ପରିୱେଷଣାର୍ଥଂ ଶିଷ୍ୟେଷୁ ସମର୍ପଯାମ୍ବଭୂୱ|
அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பங்கிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.
17 ତତଃ ସର୍ୱ୍ୱେ ଭୁକ୍ତ୍ୱା ତୃପ୍ତିଂ ଗତା ଅୱଶିଷ୍ଟାନାଞ୍ଚ ଦ୍ୱାଦଶ ଡଲ୍ଲକାନ୍ ସଂଜଗୃହୁଃ|
அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
18 ଅଥୈକଦା ନିର୍ଜନେ ଶିଷ୍ୟୈଃ ସହ ପ୍ରାର୍ଥନାକାଲେ ତାନ୍ ପପ୍ରଚ୍ଛ, ଲୋକା ମାଂ କଂ ୱଦନ୍ତି?
ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அவருடனே இருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
19 ତତସ୍ତେ ପ୍ରାଚୁଃ, ତ୍ୱାଂ ଯୋହନ୍ମଜ୍ଜକଂ ୱଦନ୍ତି; କେଚିତ୍ ତ୍ୱାମ୍ ଏଲିଯଂ ୱଦନ୍ତି, ପୂର୍ୱ୍ୱକାଲିକଃ କଶ୍ଚିଦ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ଶ୍ମଶାନାଦ୍ ଉଦତିଷ୍ଠଦ୍ ଇତ୍ୟପି କେଚିଦ୍ ୱଦନ୍ତି|
அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள்.
20 ତଦା ସ ଉୱାଚ, ଯୂଯଂ ମାଂ କଂ ୱଦଥ? ତତଃ ପିତର ଉକ୍ତୱାନ୍ ତ୍ୱମ୍ ଈଶ୍ୱରାଭିଷିକ୍ତଃ ପୁରୁଷଃ|
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் கிறிஸ்து!” என்றான்.
21 ତଦା ସ ତାନ୍ ଦୃଢମାଦିଦେଶ, କଥାମେତାଂ କସ୍ମୈଚିଦପି ମା କଥଯତ|
இயேசு அவர்களிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார்.
22 ସ ପୁନରୁୱାଚ, ମନୁଷ୍ୟପୁତ୍ରେଣ ୱହୁଯାତନା ଭୋକ୍ତୱ୍ୟାଃ ପ୍ରାଚୀନଲୋକୈଃ ପ୍ରଧାନଯାଜକୈରଧ୍ୟାପକୈଶ୍ଚ ସୋୱଜ୍ଞାଯ ହନ୍ତୱ୍ୟଃ କିନ୍ତୁ ତୃତୀଯଦିୱସେ ଶ୍ମଶାନାତ୍ ତେନୋତ୍ଥାତୱ୍ୟମ୍|
பின்பு இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும். நான் யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழும்பவும் வேண்டும்” என்றார்.
23 ଅପରଂ ସ ସର୍ୱ୍ୱାନୁୱାଚ, କଶ୍ଚିଦ୍ ଯଦି ମମ ପଶ୍ଚାଦ୍ ଗନ୍ତୁଂ ୱାଞ୍ଛତି ତର୍ହି ସ ସ୍ୱଂ ଦାମ୍ୟତୁ, ଦିନେ ଦିନେ କ୍ରୁଶଂ ଗୃହୀତ୍ୱା ଚ ମମ ପଶ୍ଚାଦାଗଚ୍ଛତୁ|
பின்பு இயேசு, அவர்கள் எல்லோரையும் நோக்கி, “யாராவது என் பின்னே வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தினந்தோறும் தம் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
24 ଯତୋ ଯଃ କଶ୍ଚିତ୍ ସ୍ୱପ୍ରାଣାନ୍ ରିରକ୍ଷିଷତି ସ ତାନ୍ ହାରଯିଷ୍ୟତି, ଯଃ କଶ୍ଚିନ୍ ମଦର୍ଥଂ ପ୍ରାଣାନ୍ ହାରଯିଷ୍ୟତି ସ ତାନ୍ ରକ୍ଷିଷ୍ୟତି|
ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அதை இழந்துபோவார்கள். என் நிமித்தம் தம் உயிரை இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
25 କଶ୍ଚିଦ୍ ଯଦି ସର୍ୱ୍ୱଂ ଜଗତ୍ ପ୍ରାପ୍ନୋତି କିନ୍ତୁ ସ୍ୱପ୍ରାଣାନ୍ ହାରଯତି ସ୍ୱଯଂ ୱିନଶ୍ୟତି ଚ ତର୍ହି ତସ୍ୟ କୋ ଲାଭଃ?
யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவர்களுக்குப் பலன் என்ன?
26 ପୁନ ର୍ୟଃ କଶ୍ଚିନ୍ ମାଂ ମମ ୱାକ୍ୟଂ ୱା ଲଜ୍ଜାସ୍ପଦଂ ଜାନାତି ମନୁଷ୍ୟପୁତ୍ରୋ ଯଦା ସ୍ୱସ୍ୟ ପିତୁଶ୍ଚ ପୱିତ୍ରାଣାଂ ଦୂତାନାଞ୍ଚ ତେଜୋଭିଃ ପରିୱେଷ୍ଟିତ ଆଗମିଷ୍ୟତି ତଦା ସୋପି ତଂ ଲଜ୍ଜାସ୍ପଦଂ ଜ୍ଞାସ୍ୟତି|
யாராவது என்னைக்குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் எனது மகிமையிலும் எனது தந்தையின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன்.
27 କିନ୍ତୁ ଯୁଷ୍ମାନହଂ ଯଥାର୍ଥଂ ୱଦାମି, ଈଶ୍ୱରୀଯରାଜତ୍ୱଂ ନ ଦୃଷ୍ଟୱା ମୃତ୍ୟୁଂ ନାସ୍ୱାଦିଷ୍ୟନ୍ତେ, ଏତାଦୃଶାଃ କିଯନ୍ତୋ ଲୋକା ଅତ୍ର ସ୍ଥନେଽପି ଦଣ୍ଡାଯମାନାଃ ସନ୍ତି|
“இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசைக் காணும்முன் மரணமடைய மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார்.
28 ଏତଦାଖ୍ୟାନକଥନାତ୍ ପରଂ ପ୍ରାଯେଣାଷ୍ଟସୁ ଦିନେଷୁ ଗତେଷୁ ସ ପିତରଂ ଯୋହନଂ ଯାକୂବଞ୍ଚ ଗୃହୀତ୍ୱା ପ୍ରାର୍ଥଯିତୁଂ ପର୍ୱ୍ୱତମେକଂ ସମାରୁରୋହ|
இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குபின், அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு, மன்றாடும்படி ஒரு மலைக்குச் சென்றார்.
29 ଅଥ ତସ୍ୟ ପ୍ରାର୍ଥନକାଲେ ତସ୍ୟ ମୁଖାକୃତିରନ୍ୟରୂପା ଜାତା, ତଦୀଯଂ ୱସ୍ତ୍ରମୁଜ୍ଜ୍ୱଲଶୁକ୍ଲଂ ଜାତଂ|
அவர் மன்றாடிக்கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள், வெண்மையாய் மின்னியது.
30 ଅପରଞ୍ଚ ମୂସା ଏଲିଯଶ୍ଚୋଭୌ ତେଜସ୍ୱିନୌ ଦୃଷ୍ଟୌ
மோசே, எலியா ஆகிய இரண்டுபேர்களும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
31 ତୌ ତେନ ଯିରୂଶାଲମ୍ପୁରେ ଯୋ ମୃତ୍ୟୁଃ ସାଧିଷ୍ୟତେ ତଦୀଯାଂ କଥାଂ ତେନ ସାର୍ଦ୍ଧଂ କଥଯିତୁମ୍ ଆରେଭାତେ|
எருசலேமில் சீக்கிரமாய் இயேசு நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32 ତଦା ପିତରାଦଯଃ ସ୍ୱସ୍ୟ ସଙ୍ଗିନୋ ନିଦ୍ରଯାକୃଷ୍ଟା ଆସନ୍ କିନ୍ତୁ ଜାଗରିତ୍ୱା ତସ୍ୟ ତେଜସ୍ତେନ ସାର୍ଦ୍ଧମ୍ ଉତ୍ତିଷ୍ଠନ୍ତୌ ଜନୌ ଚ ଦଦୃଶୁଃ|
பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும், கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் தெளிந்து விழித்தபோது, அவருடைய மகிமையையும், அவருடன் நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள்.
33 ଅଥ ତଯୋରୁଭଯୋ ର୍ଗମନକାଲେ ପିତରୋ ଯୀଶୁଂ ବଭାଷେ, ହେ ଗୁରୋଽସ୍ମାକଂ ସ୍ଥାନେଽସ୍ମିନ୍ ସ୍ଥିତିଃ ଶୁଭା, ତତ ଏକା ତ୍ୱଦର୍ଥା, ଏକା ମୂସାର୍ଥା, ଏକା ଏଲିଯାର୍ଥା, ଇତି ତିସ୍ରଃ କୁଟ୍ୟୋସ୍ମାଭି ର୍ନିର୍ମ୍ମୀଯନ୍ତାଂ, ଇମାଂ କଥାଂ ସ ନ ୱିୱିଚ୍ୟ କଥଯାମାସ|
அவ்விருவர் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது, நாம் இங்கு மூன்று கூடாரங்களை அமைப்போம். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்” என்றான். அவன் தான் சொல்வது என்னவென்று அறியாமல் சொன்னான்.
34 ଅପରଞ୍ଚ ତଦ୍ୱାକ୍ୟୱଦନକାଲେ ପଯୋଦ ଏକ ଆଗତ୍ୟ ତେଷାମୁପରି ଛାଯାଂ ଚକାର, ତତସ୍ତନ୍ମଧ୍ୟେ ତଯୋଃ ପ୍ରୱେଶାତ୍ ତେ ଶଶଙ୍କିରେ|
பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் சூழ்ந்தபோது அவர்கள் பயந்தார்கள்.
35 ତଦା ତସ୍ମାତ୍ ପଯୋଦାଦ୍ ଇଯମାକାଶୀଯା ୱାଣୀ ନିର୍ଜଗାମ, ମମାଯଂ ପ୍ରିଯଃ ପୁତ୍ର ଏତସ୍ୟ କଥାଯାଂ ମନୋ ନିଧତ୍ତ|
அப்பொழுது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிந்துகொண்டவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
36 ଇତି ଶବ୍ଦେ ଜାତେ ତେ ଯୀଶୁମେକାକିନଂ ଦଦୃଶୁଃ କିନ୍ତୁ ତେ ତଦାନୀଂ ତସ୍ୟ ଦର୍ଶନସ୍ୟ ୱାଚମେକାମପି ନୋକ୍ତ୍ୱା ମନଃସୁ ସ୍ଥାପଯାମାସୁଃ|
அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை.
37 ପରେଽହନି ତେଷୁ ତସ୍ମାଚ୍ଛୈଲାଦ୍ ଅୱରୂଢେଷୁ ତଂ ସାକ୍ଷାତ୍ କର୍ତ୍ତୁଂ ବହୱୋ ଲୋକା ଆଜଗ୍ମୁଃ|
மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது.
38 ତେଷାଂ ମଧ୍ୟାଦ୍ ଏକୋ ଜନ ଉଚ୍ଚୈରୁୱାଚ, ହେ ଗୁରୋ ଅହଂ ୱିନଯଂ କରୋମି ମମ ପୁତ୍ରଂ ପ୍ରତି କୃପାଦୃଷ୍ଟିଂ କରୋତୁ, ମମ ସ ଏୱୈକଃ ପୁତ୍ରଃ|
மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை.
39 ଭୂତେନ ଧୃତଃ ସନ୍ ସଂ ପ୍ରସଭଂ ଚୀଚ୍ଛବ୍ଦଂ କରୋତି ତନ୍ମୁଖାତ୍ ଫେଣା ନିର୍ଗଚ୍ଛନ୍ତି ଚ, ଭୂତ ଇତ୍ଥଂ ୱିଦାର୍ୟ୍ୟ କ୍ଲିଷ୍ଟ୍ୱା ପ୍ରାଯଶସ୍ତଂ ନ ତ୍ୟଜତି|
ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது.
40 ତସ୍ମାତ୍ ତଂ ଭୂତଂ ତ୍ୟାଜଯିତୁଂ ତୱ ଶିଷ୍ୟସମୀପେ ନ୍ୟୱେଦଯଂ କିନ୍ତୁ ତେ ନ ଶେକୁଃ|
அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான்.
41 ତଦା ଯୀଶୁରୱାଦୀତ୍, ରେ ଆୱିଶ୍ୱାସିନ୍ ୱିପଥଗାମିନ୍ ୱଂଶ କତିକାଲାନ୍ ଯୁଷ୍ମାଭିଃ ସହ ସ୍ଥାସ୍ୟାମ୍ୟହଂ ଯୁଷ୍ମାକମ୍ ଆଚରଣାନି ଚ ସହିଷ୍ୟେ? ତୱ ପୁତ୍ରମିହାନଯ|
அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார்.
42 ତତସ୍ତସ୍ମିନ୍ନାଗତମାତ୍ରେ ଭୂତସ୍ତଂ ଭୂମୌ ପାତଯିତ୍ୱା ୱିଦଦାର; ତଦା ଯୀଶୁସ୍ତମମେଧ୍ୟଂ ଭୂତଂ ତର୍ଜଯିତ୍ୱା ବାଲକଂ ସ୍ୱସ୍ଥଂ କୃତ୍ୱା ତସ୍ୟ ପିତରି ସମର୍ପଯାମାସ|
அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார்.
43 ଈଶ୍ୱରସ୍ୟ ମହାଶକ୍ତିମ୍ ଇମାଂ ୱିଲୋକ୍ୟ ସର୍ୱ୍ୱେ ଚମଚ୍ଚକ୍ରୁଃ; ଇତ୍ଥଂ ଯୀଶୋଃ ସର୍ୱ୍ୱାଭିଃ କ୍ରିଯାଭିଃ ସର୍ୱ୍ୱୈର୍ଲୋକୈରାଶ୍ଚର୍ୟ୍ୟେ ମନ୍ୟମାନେ ସତି ସ ଶିଷ୍ୟାନ୍ ବଭାଷେ,
அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம்,
44 କଥେଯଂ ଯୁଷ୍ମାକଂ କର୍ଣେଷୁ ପ୍ରୱିଶତୁ, ମନୁଷ୍ୟପୁତ୍ରୋ ମନୁଷ୍ୟାଣାଂ କରେଷୁ ସମର୍ପଯିଷ୍ୟତେ|
“நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார்.
45 କିନ୍ତୁ ତେ ତାଂ କଥାଂ ନ ବୁବୁଧିରେ, ସ୍ପଷ୍ଟତ୍ୱାଭାୱାତ୍ ତସ୍ୟା ଅଭିପ୍ରାଯସ୍ତେଷାଂ ବୋଧଗମ୍ୟୋ ନ ବଭୂୱ; ତସ୍ୟା ଆଶଯଃ କ ଇତ୍ୟପି ତେ ଭଯାତ୍ ପ୍ରଷ୍ଟୁଂ ନ ଶେକୁଃ|
அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள்.
46 ତଦନନ୍ତରଂ ତେଷାଂ ମଧ୍ୟେ କଃ ଶ୍ରେଷ୍ଠଃ କଥାମେତାଂ ଗୃହୀତ୍ୱା ତେ ମିଥୋ ୱିୱାଦଂ ଚକ୍ରୁଃ|
சீடர்களுக்கிடையில் தங்களில் யார் பெரியவன் என்பதை பற்றி ஒரு வாக்குவாதமும் எழுந்தது.
47 ତତୋ ଯୀଶୁସ୍ତେଷାଂ ମନୋଭିପ୍ରାଯଂ ୱିଦିତ୍ୱା ବାଲକମେକଂ ଗୃହୀତ୍ୱା ସ୍ୱସ୍ୟ ନିକଟେ ସ୍ଥାପଯିତ୍ୱା ତାନ୍ ଜଗାଦ,
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார்.
48 ଯୋ ଜନୋ ମମ ନାମ୍ନାସ୍ୟ ବାଲାସ୍ୟାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି ସ ମମାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି, ଯଶ୍ଚ ମମାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି ସ ମମ ପ୍ରେରକସ୍ୟାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି, ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେଯଃ ସ୍ୱଂ ସର୍ୱ୍ୱସ୍ମାତ୍ କ୍ଷୁଦ୍ରଂ ଜାନୀତେ ସ ଏୱ ଶ୍ରେଷ୍ଠୋ ଭୱିଷ୍ୟତି|
பின்பு அவர் சீடர்களிடம், “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள் என்னையே ஏற்றுக்கொள்கிறார்கள்; என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் எல்லோரிலும் மிகவும் சிறியவராய் இருக்கிறவர்களே மிகப்பெரியவர்களாய் இருக்கிறார்கள்” என்றார்.
49 ଅପରଞ୍ଚ ଯୋହନ୍ ୱ୍ୟାଜହାର ହେ ପ୍ରଭେ ତୱ ନାମ୍ନା ଭୂତାନ୍ ତ୍ୟାଜଯନ୍ତଂ ମାନୁଷମ୍ ଏକଂ ଦୃଷ୍ଟୱନ୍ତୋ ୱଯଂ, କିନ୍ତ୍ୱସ୍ମାକମ୍ ଅପଶ୍ଚାଦ୍ ଗାମିତ୍ୱାତ୍ ତଂ ନ୍ୟଷେଧାମ୍| ତଦାନୀଂ ଯୀଶୁରୁୱାଚ,
அப்பொழுது யோவான் இயேசுவிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.
50 ତଂ ମା ନିଷେଧତ, ଯତୋ ଯୋ ଜନୋସ୍ମାକଂ ନ ୱିପକ୍ଷଃ ସ ଏୱାସ୍ମାକଂ ସପକ୍ଷୋ ଭୱତି|
அதற்கு இயேசு, “அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கிறான்” என்றார்.
51 ଅନନ୍ତରଂ ତସ୍ୟାରୋହଣସମଯ ଉପସ୍ଥିତେ ସ ସ୍ଥିରଚେତା ଯିରୂଶାଲମଂ ପ୍ରତି ଯାତ୍ରାଂ କର୍ତ୍ତୁଂ ନିଶ୍ଚିତ୍ୟାଗ୍ରେ ଦୂତାନ୍ ପ୍ରେଷଯାମାସ|
இயேசு தான் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, மனவுறுதியோடு அவர் எருசலேமை நோக்கிப் புறப்பட்டார்.
52 ତସ୍ମାତ୍ ତେ ଗତ୍ୱା ତସ୍ୟ ପ୍ରଯୋଜନୀଯଦ୍ରୱ୍ୟାଣି ସଂଗ୍ରହୀତୁଂ ଶୋମିରୋଣୀଯାନାଂ ଗ୍ରାମଂ ପ୍ରୱିୱିଶୁଃ|
அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்பாகவே சீடர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள்.
53 କିନ୍ତୁ ସ ଯିରୂଶାଲମଂ ନଗରଂ ଯାତି ତତୋ ହେତୋ ର୍ଲୋକାସ୍ତସ୍ୟାତିଥ୍ୟଂ ନ ଚକ୍ରୁଃ|
அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை.
54 ଅତଏୱ ଯାକୂବ୍ୟୋହନୌ ତସ୍ୟ ଶିଷ୍ୟୌ ତଦ୍ ଦୃଷ୍ଟ୍ୱା ଜଗଦତୁଃ, ହେ ପ୍ରଭୋ ଏଲିଯୋ ଯଥା ଚକାର ତଥା ୱଯମପି କିଂ ଗଗଣାଦ୍ ଆଗନ୍ତୁମ୍ ଏତାନ୍ ଭସ୍ମୀକର୍ତ୍ତୁଞ୍ଚ ୱହ୍ନିମାଜ୍ଞାପଯାମଃ? ଭୱାନ୍ କିମିଚ୍ଛତି?
அவருடைய சீடரான யாக்கோபும், யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்ததுபோல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள்.
55 କିନ୍ତୁ ସ ମୁଖଂ ପରାୱର୍ତ୍ୟ ତାନ୍ ତର୍ଜଯିତ୍ୱା ଗଦିତୱାନ୍ ଯୁଷ୍ମାକଂ ମନୋଭାୱଃ କଃ, ଇତି ଯୂଯଂ ନ ଜାନୀଥ|
ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார்.
56 ମନୁଜସୁତୋ ମନୁଜାନାଂ ପ୍ରାଣାନ୍ ନାଶଯିତୁଂ ନାଗଚ୍ଛତ୍, କିନ୍ତୁ ରକ୍ଷିତୁମ୍ ଆଗଚ୍ଛତ୍| ପଶ୍ଚାଦ୍ ଇତରଗ୍ରାମଂ ତେ ଯଯୁଃ|
அவர்கள் அதற்குப் பின்பு வேறு கிராமத்திற்குச் சென்றார்கள்.
57 ତଦନନ୍ତରଂ ପଥି ଗମନକାଲେ ଜନ ଏକସ୍ତଂ ବଭାଷେ, ହେ ପ୍ରଭୋ ଭୱାନ୍ ଯତ୍ର ଯାତି ଭୱତା ସହାହମପି ତତ୍ର ଯାସ୍ୟାମି|
அவர்கள் வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
58 ତଦାନୀଂ ଯୀଶୁସ୍ତମୁୱାଚ, ଗୋମାଯୂନାଂ ଗର୍ତ୍ତା ଆସତେ, ୱିହାଯସୀଯୱିହଗାନାଂ ନୀଡାନି ଚ ସନ୍ତି, କିନ୍ତୁ ମାନୱତନଯସ୍ୟ ଶିରଃ ସ୍ଥାପଯିତୁଂ ସ୍ଥାନଂ ନାସ୍ତି|
இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு பதுங்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
59 ତତଃ ପରଂ ସ ଇତରଜନଂ ଜଗାଦ, ତ୍ୱଂ ମମ ପଶ୍ଚାଦ୍ ଏହି; ତତଃ ସ ଉୱାଚ, ହେ ପ୍ରଭୋ ପୂର୍ୱ୍ୱଂ ପିତରଂ ଶ୍ମଶାନେ ସ୍ଥାପଯିତୁଂ ମାମାଦିଶତୁ|
அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான்.
60 ତଦା ଯୀଶୁରୁୱାଚ, ମୃତା ମୃତାନ୍ ଶ୍ମଶାନେ ସ୍ଥାପଯନ୍ତୁ କିନ୍ତୁ ତ୍ୱଂ ଗତ୍ୱେଶ୍ୱରୀଯରାଜ୍ୟସ୍ୟ କଥାଂ ପ୍ରଚାରଯ|
அப்பொழுது இயேசு அவனிடம், “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார்.
61 ତତୋନ୍ୟଃ କଥଯାମାସ, ହେ ପ୍ରଭୋ ମଯାପି ଭୱତଃ ପଶ୍ଚାଦ୍ ଗଂସ୍ୟତେ, କିନ୍ତୁ ପୂର୍ୱ୍ୱଂ ମମ ନିୱେଶନସ୍ୟ ପରିଜନାନାମ୍ ଅନୁମତିଂ ଗ୍ରହୀତୁମ୍ ଅହମାଦିଶ୍ୟୈ ଭୱତା|
இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப்போய், எனது குடும்பத்தாரிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றான்.
62 ତଦାନୀଂ ଯୀଶୁସ୍ତଂ ପ୍ରୋକ୍ତୱାନ୍, ଯୋ ଜନୋ ଲାଙ୍ଗଲେ କରମର୍ପଯିତ୍ୱା ପଶ୍ଚାତ୍ ପଶ୍ୟତି ସ ଈଶ୍ୱରୀଯରାଜ୍ୟଂ ନାର୍ହତି|
அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவன்” என்றார்.

< ଲୂକଃ 9 >